எத்தனை துணைகள் இருக்க
அத்தனையும் விட்டுவிட்டு
உன் துணை தேடியது எதற்காக?
பூவுக்கும் இதழ் உண்டு
உனக்கும் இதழ் உண்டு ..
இரண்டையும் ஒன்றாக
உன்னுடத்தில் பார்கிறேன்
உன் புன்னகை உதட்டினில் .
பக்கத்தில் நீ இருந்தால் பாவி நான்
பறிப்பதற்கு என்ன இருக்கு
துரத்தில் இருந்துகொண்டே
பறித்துவிட்டேன்
பல ஜென்ம பரிசு அதை .
கற்றுக்கொண்ட கல்விக்கும்
தேடிக்கொண்ட செல்வத்துக்கும்
மதிப்பும் இல்லை - உன்னை
பெற்றுக்கொண்ட எனக்கு
இதை விட பெரிது எதுவும் இல்லை
காதலித்த காலமும்
கண்ணீர் வடித்த காலமும்
கொஞ்சக்காலம் எமக்கு - இனி
எனக்கு நீ இருப்பாய்
உனக்கு நான் இருப்பேன்
இதில் ஒன்று இழந்தால்
உனக்கு முன் நான் இறப்பேன் .
பழகிப்பார்க்க இது
புதிதான உறவும் இல்லை
பிரித்து பார்க்க இது
வெறுப்பான உடலும் இல்லை
உன்னோடு வாழத வாழ்வு எனக்கு
தேவையும் இல்லை
இல்லை எனில் நாம் வாழ்ந்தும்
நின்மதி இல்லை.
என்றுமே தொடரும்
என் அன்புத் தொல்லைகள் ...
அதை நீ ஏற்க மறுத்தால் உனக்கு
நிறைய தொல்லைகள்
காற்றுக்கு அணை மரம்
நீருக்கு அணை கட்டு ....
கடலுக்கு அணை கரை ....
என்றுமே நீதான்
என் வாழ்கை துணை

No comments:
Post a Comment