உறவே....!!
உன்னை சிறை செய்ய நினைத்து
உன் இதயச் சிறையில் நான்
சிக்கிக் கொண்டேன்.....

ஒளி ஊடுருவிச் செல்லும் சொற்களால்
என் உயிர் ஊடுருவிச் சென்றாய்
என்னை வென்றாய்......
உன் கண்ணீர் துடைப்பேன்
என் கண்ணில் நீர்மல்க.....
உறவே! நான் வாழ நீ வேண்டும்....
என் உள்ளம் காலிக் கிண்ணம்
உன் அன்பை ஊற்றி நிரப்பு....
கல்லாகும் என் இதயம் - நீ
நுழைந்த இடத்தில் யாரும்
நுழையக் கூடாதென்று.....
இதயத்தில் பாதிப்பில்லை
பாதிப்பே இதயமாக இருப்பதனால்...
நான் வாழ நீ வேண்டும்.....
பாதியில் வந்த உறவல்ல
பாதி பாதியாக வாழ்வதற்கு...
பாதியில் விட்டு விடாதே
பருதவிக்கும் என் மனது.....
தருவேன் பெறுவேன்
இருவருக்கும் இழப்பில்லாத
சிரிப்பு ஒன்றை.......
உறவே! நான் வாழ நீ வேண்டும்..
No comments:
Post a Comment