Sunday, 13 May 2012

தாயே நீர் ஆண்டு நூறு வாழி


கருவில் நானழுதால் 
கணத்திலவள் கண்கலங்கும் 
உதரம் நான் உதைத்த போது - தன் 
உதிரம் தந்த உத்தமியாள்
குணம் மாறா உக்களியாள்

கண்களிலே கோபமில்லை - அவள் 
பாசத்தில் பாசாங்கில்லை
நெஞ்சிலே வஞ்சமில்லை - என்னை
பிஞ்சிலே காக்கும் தெய்வக் 
குணத்திற்கோ ஈடு இல்லை

மிஞ்சினால் கொஞ்சமாய்த் தன்
அன்பிலே வஞ்சிப்பாள்
அஞ்சினால் எனைத் தூக்கி 
கொஞ்சியே பயம் தீர்ப்பாள் - நிஜக் 
காதலின் கருத்துரைப்பாள்

உண்மையினை வளர்த்திடுவாள் 
பொய்மையினை உணர்த்திடுவாள் 
காரணங்கள் சொல்லாமலே 
கண்களாலே கடிந்திடுவாள் - பின்
கரத்தினால் கனியவைப்பாள்

மீசை அரும்பும் வயதில்க் கூட
அவள் பாசம் அறுந்திடாது
சம அன்பைக் காட்டிடுவாள் - தீய
சரித்திரத்தை மாற்றி வைப்பாள் 
சஞ்சலமின்றிய சாதனையாள்

என் வெற்றிகளில் பெருமைப்படும் 
முதல்ப் பெண் நீர் - என் தோல்வி கண்டு 
சிந்திடுவீர் முதற்க் கண்ணீர் 
என் ஆயுள் தரத் தயங்க மாட்டேன் 
தாயே நீர் ஆண்டு நூறு வாழி!!

No comments:

Post a Comment